search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி பண்டிகை"

    • காலை 6 மணிக்கு துவங்கிய வார சந்தையில் தற்போது விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    • வாரச்சந்தை நடைபெறும் இடம் முழுவதும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் வருகையால் களை கட்டியுள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகேயுள்ள குந்தாரப்பள்ளி புகழ்பெற்ற வாரச்சந்தையில் வெள்ளிக்கிழமைதோறும் ஆடு, மாடு, கோழி விற்பனை நடைபெற்று வருகிறது.

    தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, சேலம், திருச்சி மற்றும் கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்காக அழைத்து வந்துள்ளனர்.

    செம்மறியாடு, வெள்ளாடு, மறிக்கை ஆடுகள் விற்பனைக்காக அழைத்து வரப்பட்டுள்ளது. காலை 6 மணிக்கு துவங்கிய வார சந்தையில் தற்போது விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சென்னை, வேலூர், மதுரை, கோவை, சேலம், திருச்சி, ஈரோடு, பொள்ளாச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கர்நாடகா, பெங்களூரு, ஆந்திரா போன்ற பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆடுகளை வாங்க குவிந்துள்ளனர்.

    ஒரு கிடா ஆடு அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையிலும் பெண் ஆடுகள் அதிகபட்சமாக ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஆடுகள் வாங்கிச்செல்லும் வியாபாரிகள் கூடுதல் விலை விற்பதால் ஆட்டு இறைச்சியின் விலை அதிகரிக்கும் என்றும் வழக்கமாக ஒரு கிலோ 750 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலையில் தற்போது பண்டிகை காலங்களில் ரூ. 900க்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.

    சராசரியாக தற்போது தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்களும் வியாபாரிகளும் போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்குவதால் விற்பனை அதிகரித்துள்ளது. இன்று ஒரு நாள் மட்டும் சுமார் ரூ. 7 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர். வாரச்சந்தை நடைபெறும் இடம் முழுவதும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் வருகையால் அந்த பகுதியே களை கட்டியுள்ளது.

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 1050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
    • இந்த தகவலை மதுரை அரசு போக்குவரத்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

    மதுரை

    தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக மதுரை மண்டல மேலாண் இயக்கு நர் ஆறுமுகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    வருகிற 12-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

    எனவே பயணிகளின் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் அரசுப் போக்குவரத்துக் கழகம் (மதுரை), மதுரை போக்கு வரத்துக்கழக மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மண்டலங்கள் மூலம் வழக்கமான வழித்தட பேருந்துகளும் மற்றும் சிறப்பு பேருந்துகளும் தீபாவளி பண்டிகைக்கு முன்பு இன்று முதல் 11-ந்தேதி வரை 565 பேருந்து களும், பண்டிகைக்கு பின்பு 13-ந்தேதி முதல் 15-ந் தேதி வரை 485 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

    மதுரை, திண்டுக்கல், தேனி, பழனி, விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம் ஆகிய பேருந்து நிலையங்க ளிலிருந்து திருச்சி, திருப்பூர், கோவை, திருநெல்வேலி, நாகர்கோவில், திருச் செந்தூர், கம்பம், குமுளி மற்றும் சென்னை போன்ற முக்கிய ஊர்களுக்கு பயணி களின் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்ய விரிவான ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளது.

    இப்போக்குவரத்துக் கழகம் மூலம் கொடைக் கானல், கொல்லம், மூணாறு, திருப்பூர், கோவை, மேட்டுப் பாளையம், ஈரோடு, சேலம், நாகர்கோவில், திருசெந்தூர், நெய்வேலி, திருவண்ணா மலை, விழுப்புரம், சென்னை, மன்னார்குடி, கடலூர், நாகூர் மற்றும் நெடுந்தூர பயணிகள் சிரம மின்றி பயணிக்கவும், முன் பதிவில்லா பேருந்துக ளுக்காக காத்திருப்பதை தவிர்க்கவும், பயணிகளின் கடைசி நேர கூட்ட நெரி சலையும், கால நேர விர யத்தையும் தவிர்க்கும் பொருட்டு அரசு போக்கு வரத்துக் கழகம் மூலம் (OTRS) https://www.tnstc.in, TNSTC Mobile App கைபேசி செயலி மற்றும் இணைய சேவை மையம் வழியாக 3X2 Deluxe பேருந்துகளின் முன்பதிவு செய்து பயனடையலாம். மேலும் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டும், பயணிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வதற்கும் ஏது வாக பயணிகளுக்கு வழி காட்டவும் சிறப்பு பேருந்து களை கண்காணிக்கவும், முக்கிய பேருந்து நிலை யங்களில் அலுவலர்கள், பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் மற்றும் பயணசீட்டு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 'காட்பாதர்' என்ற பீர் பாட்டில் புதிதாக அறிமுகம் செய்யப்படுகிறது.
    • வருகிற டிசம்பர் மாதத்துக்குள் இன்னும் 5 வகைகளில் புதிய பீர் பாட்டில்களை அறிமுகம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் தற்போது புதிதாக 2 வகைகளில் பீர் பாட்டில்களை அறிமுகம் செய்துள்ளது. குடிமகன்களின் கோரிக்கைக்கு ஏற்ப இந்த பீர் பாட்டில்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

    தற்போது 'தண்டர்போல்ட் ஸ்டிராங்' என்ற புதிய வகை பீர் பாட்டில் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் நேற்று முன்தினம் இரவு முதல் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த பீர் பாட்டிலின் விலை ரூ.160 ஆகும். மேலும் மற்றொரு ரகமாக 'காட்பாதர்' என்ற பீர் பாட்டிலும் புதிதாக அறிமுகம் செய்யப்படுகிறது.

    இந்த புதிய பீர் பாட்டில் வகைகளை தீபாவளி விருந்தாக குடிமகன்கள் பார்க்கிறார்கள். வருகிற டிசம்பர் மாதத்துக்குள் இன்னும் 5 வகைகளில் புதிய பீர் பாட்டில்களை அறிமுகம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.

    • தொடர் மழையால் பூக்களின் விளைச்சல் அதிகரித்துள்ளது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில் பலாயிரம் ஏக்கரில் விவசாயிகள் பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர்.

    குறிப்பாக பாலக்கோடு சுற்றுவட்டாரப் பகுதி மற்றும் பென்னாகரம், ஜருகு, சாமி செட்டிபட்டி, கெட்டுப்பட்டி, தொப்பூர், கம்பைநல்லூர், மொரப்பூர், மூக்கனூர், உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிகபடியாக சாமந்தி, சம்பங்கி, பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

    தற்போது சாமந்திப்பூ சீசன் என்பதாலும் வரத்து அதிகரித்து உள்ளதால் கடந்த ஒரு வாரமாக சாமந்தி கிலோ ரூ.50-க்கும் சம்பங்கி கிலோ ரூ.30 என விற்பனை செய்யப்பட்டது.

    சாமந்தி, சம்பங்கி வரத்து அதிகரிப்பால் பூ மார்க்கெட்டில் விற்பனையாகாமல் தேக்க நிலை உள்ளதால் பறித்த பூக்களை விவசாயிகள் விலையின்றி ரோடோரங்களில் கொட்டி செல்கின்றனர்.

    இந்த நிலையில் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை என்பதால் பூக்களின் விலை உயிரும் என எதிர்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இன்று சாமந்திப்பூ கிலோ ரூ.10 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டது.

    சம்பங்கி கிலோ ரூ. 20-க்கு விற்பனை செய்யப்பட்டதால் அறுவடைக் கூலி கூட கிடைக்கவில்லை என விவசாயிகள் ஆதங்கப்பட்டனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறும்போது தொடர் மழையால் பூக்களின் விளைச்சல் அதிகரித்துள்ளது. வரத்தும் அதிகரித்துள்ளது. இருந்தாலும் பூக்களில் மழை தண்ணீர் இறங்குவதால் பூக்கள் நனைந்து அதன் இதழ்கள் தொங்கி அதன் தன்மையிலிருந்து மாறுபட்டு அழுகி வருகிறது. மீதமுள்ள தரமான

    அறுவடை செய்த பூக்களை வாங்குவதற்கு வியாபாரிகள் வருவதில்லை கிலோ ரூ.10 முதல் ரூ.30-க்கு கூவி கூவி விற்பனை செய்யும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது என கவலையோடு தெரிவித்தனர்.

    இன்று தருமபுரி நகரப் பஸ் நிலையத்தில் இயங்க வரும் பூ மார்க்கெட்டில் சன்ன மல்லி ரூ.550, குண்டு மல்லி ரூ.400, காக்கட்ட ரூ.400, ஜாதி மல்லி ரூ.250, மூக்குத்தி பூ ரூ.300, பன்னீர் ரோஸ் ரூ.300, கோழி கொண்டை ரூ.20 என விற்பனை செய்யப்பட்டது.

    • தீபாவளி பண்டிகையை ஒட்டி உயர்ந்திருந்த தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது.
    • சென்னையில் 1000-க்கும் மேற்பட்ட நகைக்கடைகள் உள்ளன.

    சென்னை:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் ஜவுளி கடைகளில் தங்களுக்கு தேவையான ஆடைகளை தேர்ந்தெடுத்து வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

    அதே நேரத்தில் தீபாவளி அன்று மாலையில் வீடுகளில் லட்சுமி குபேர பூஜைக்கும் மக்கள் தயாராகி வருகிறார்கள். அன்றைய தினம் நகைகளை வாங்கி வீட்டில் வைத்து பூஜை செய்தால் கூடுதலாக மேலும் நகைகள் சேரும் என்பது நம்பிக்கை. இதன்படி சென்னையில் பெரும்பாலான வீடுகளில் லட்சுமி குபேர பூஜை நடைபெறுவது வழக்கம்.

    இதனால் அட்சய திருதியை நாளில் நகை வாங்குவது போன்று தீபாவளி பண்டிகையையொட்டியும் நகை வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். அந்த வகையில் இந்த தீபாவளிக்கும் நகைகளை வாங்க மக்கள் மத்தியில் அதிக ஆர்வம் காணப்படுகிறது.

    கடந்த ஆண்டு தீபாவளியையொட்டி ஒரு பவுன் நகை ரூ.37,920 ஆக இருந்தது. ஆனால் தற்போது ஒரு பவுன் தங்க நகையின் விலை ரூ.44 ஆயிரத்து 920 ஆக உள்ளது. இதன் மூலம் பவுனுக்கு ரூ.7ஆயிரம் அதிகரித்துள்ள போதிலும் மக்கள் மத்தியில் நகைகளை வாங்குவதில் இருக்கும் ஆர்வம் குறையாமலே இருக்கிறது என்கிறார்.

    சென்னை நகை வியாபாரிகள் சங்கத் தலைவரான ஜெயந்திலால் ஜலானி இது தொடர்பாக அவர் கூறும்போது, தீபாவளியை ஒட்டி மக்கள் மத்தியில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் தீபாவளி போனஸ் வாங்குபவர்கள், தீபாவளியை கணக்கிட்டு நகை, சுவீட்டுகளை வாங்க சீட்டு போட்டு வைத்திருப்பார்கள். இதன் மூலம் சேரும் தொகையை வைத்து தீபாவளி பண்டிகையொட்டி நகையை வாங்குவதற்கு எப்போதுமே மக்கள் ஆர்வமாக இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

    தங்க நகையின் விலை உயர்ந்துள்ள போதிலும் இந்த ஆண்டும் எப்போதும் போல விற்பனை அதிகரிக்கும் என்று நினைக்கிறோம். 30 சதவீதம் வரையில் தங்க நகைகள் இந்த ஆண்டு விற்பனையாக வாய்ப்பிருப்பதாக ஜெயந்திலால் ஜலானி தெரிவித்தார்.

    தீபாவளி பண்டிகையை ஒட்டி உயர்ந்திருந்த தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 4 நாட்களில் பவுனுக்கு ரூ.800 என்கிற அளவுக்கு தங்கத்தின் விலை குறைந்து இருக்கிறது.

    ரூ.45 ஆயிரத்தை தாண்டி இருந்த தங்கத்தின் விலை தற்போது குறைந்திருப்பதாலும் தீபாவளியையொட்டி தங்கம் வாங்கினால் செல்வம் செழிக்கும் என்ற நம்பிக்கையினாலும் பொதுமக்கள் மத்தியில் தங்கம் வாங்குவதற்கான ஆர்வம் அதிகரித்துள்ளதாகவே நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தமிழகம் முழுவதும் உள்ள 35 ஆயிரம் நகைக்கடைகளில் அதிக அளவில் தங்க நகைகள் விற்பனையாவதாக நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னையில் 1000-க்கும் மேற்பட்ட நகைக்கடைகள் உள்ளன. இந்த நகைக்கடைகளிலும் மக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள் இந்த தீபாவளிக்கு வழக்கமான தங்க விற்பனையை விட கூடுதலாக நகை விற்பனையாகும் என்பதால் புதுப்புது டிசைன்களில் தங்க நகைகள் வந்து உள்ளன.

    தீபாவளிக்கு எப்போதுமே வழக்கமான விற்பனையைவிட 30 சதவீதம் அளவுக்கு விற்பனை அதிகரிக்கும் இந்த ஆண்டும் அதே போன்று விற்பனை இருக்கும் என்று நம்புகிறோம் எனவும் இதன் மூலம் ரூ.500 கோடி தாண்டி நகை விற்பனையாகும் என்றும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    குறிப்பாக ஆண்கள், பெண்கள் இருவரையும் கவரும் வகையில் புதிய டிசைன் வகைகளும் விற்பனைக்காக வந்துள்ளன. இப்படி தங்க நகைகளை தீபாவளியொட்டி வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் மக்கள் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாகவே நகைகளை வாங்கி வருகிறார்கள் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த தீபாவளிக்கு 1,500 கிலோ அளவுக்கு தமிழகம் முழுவதும் நகைகள் விற்பனையாக வாய்ப்பு இருப்பதாகவும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • வரத்து குறைவு காரணமாக விலை அதிகரித்துள்ளதாக ஆடுகளின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
    • அதிகளவில் கூட்டம் கூடியதால் சந்தை நடைபெறும் ஆட்டுச்சந்தையில் கடும் இடநெருக்கடி உண்டானது.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆட்டுசந்தை தென் மாவட்ட அளவில் நடைபெறும் பெரிய ஆட்டுசந்தையாகும். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டுச்சந்தையில் 8 ஆயிரம் முதல் 10 ஆடுகள் வரை விற்பனையாவது வழக்கம்.

    இந்தநிலையில் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகையையொட்டி இன்று சிறப்பு ஆட்டுச்சந்தை நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த சந்தை நண்பகல் 11 மணி வரை நடைபெற்றது. இதில் உள்ளூர் ஆடுகளை தவிர ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலில் இருந்தும் லாரிகளில் பல ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. ஆடுகளை வாங்க ஏராளமான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குவிந்தனர்.

    ஆடுகளை வாங்க மதுரை, விருதுநகர், சிவகாசி, கம்பம், உசிலம்பட்டி, வத்தலக்குண்டு, ராஜபாளையம், சிவகங்கை, காரைக்குடி பகுதிகளிலிருந்து ஏராளமான வியாபாாிகள் வந்திருந்தனர். இதனால் சந்தை நடைபெற்ற ஆட்டுச்சந்தை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதுகுறித்து ஆடு விற்பனையாளர்கள் கூறுகையில் தீபாவளி, பொங்கல் மற்றும் ரம்ஜான் பண்டிகை காலங்களில் திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் அதிகளவில் ஆடுகள் விற்பனையாவது வழக்கம்.

    இந்தாண்டு தீபாவளி நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஆடுகள் வாங்க ஆயிரக்கணக்கானோர் வந்துள்ளனர். இதில் 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரையில் ஆடுகள் விற்பனையாகியுள்ளது. அதே போல் ஆடுகளின் விலையும் அதிகரித்துள்ளது. 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்தாண்டை விட இந்த ஆண்டு ஆடுகளின் விலை ஆயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    வரத்து குறைவு காரணமாக விலை அதிகரித்துள்ளதாகவும் ஆடுகளின் உரிமையாளர்கள் தெரிவித்தனர். தீபாவளி சிறப்பு ஆட்டுச்சந்தையான இன்று ஒருநாள் மட்டும் சுமார் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது. அதிகளவில் கூட்டம் கூடியதால் சந்தை நடைபெறும் ஆட்டுச்சந்தையில் கடும் இடநெருக்கடி உண்டானது.

    எனவே நகராட்சி நிர்வாகம் ஆட்டுச்சந்தையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர். தீபாவளியையொட்டி கடந்த சில வாரங்களாக ஆடுகளின் விலை அதிகரித்து வந்ததாகவும் தீபாவளி முடிந்த பிறகு ஆடுகளின் விலையும் குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் கோழி விற்பனையும் நடைபெறுவது வழக்கம். ஆட்டுச்சந்தையின் வாசல் பகுதியில் ஏராளமான கோழி வியாபாரிகள் நாட்டு கோழிகள், சேவல்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதனையும் ஏராளமானோர் வாங்கி சென்றனர்.

    • சட்டை பாக்கெட் மற்றும் பேண்டின் பின் பாக்கெட்டில் வைக்கப்படும் 'மொபைல்போன்'களை அலேக்காக திருடி செல்கின்றனர்.
    • பலே ஆசாமிகள், தங்களின் கவனத்தை திசை திருப்பி, பணம், தங்க நகை போன்ற பொருட்களை திருடி செல்லும் வாய்ப்புகள் உள்ளது.

    திருப்பூர்:

    தீபாவளி நெருங்கி வருவதால், ஊரெங்கும் களைக்கட்ட துவங்கியிருக்கிறது பண்டிகையின் கோலாகலம். நகரம் மற்றும் ஊரக பகுதிகளில் போலீசார் சார்பில் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள ஒலி பெருக்கியில், சில 'உஷார்' அறிவிப்புகள் தொடர்ந்து ஒளிப்பரப்பு செய்து வருகின்றனர். பெரும்பாலும், மாலை, இரவு நேரங்கள், வார விடுமுறை நாட்களில், தீபாவளி பர்சேஸ் களைகட்டியுள்ள நிலையில், கடைத்தெரு வீதிகளில், மக்கள் அடர்த்தியாக குவிகின்றனர். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி, ஆண்களிடம் பிக்பாக்கெட் அடிப்பது, பெண்களின் 'ேஹண்ட்பேக்' பறித்து செல்வது, பல நேரங்களில் பெண்கள் அணிந்துள்ள நகைகளை அபேஸ் செய்து என பல குற்ற சம்பவங்கள் குறைவில்லாமல் நடக்கின்றன. சட்டை பாக்கெட் மற்றும் பேண்டின் பின் பாக்கெட்டில் வைக்கப்படும் 'மொபைல்போன்'களை அலேக்காக திருடி செல்கின்றனர். இந்த திருட்டில் ஈடுபடுவது ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் தான். எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் போலீசார். திருப்பூர் நகரின் பிரதான சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கியில், 'பொதுமக்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும். தங்கள் உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். அறிமுகமில்லாத நபர்களிடம் பேச வேண்டாம். பலே ஆசாமிகள், தங்களின் கவனத்தை திசை திருப்பி, பணம், தங்க நகை போன்ற பொருட்களை திருடி செல்லும் வாய்ப்புகள் உள்ளது என, தொடர்ந்து விழிப்புணர்வு வாசகம் அடங்கிய அறிவிப்பை ஒலிபரப்பி வருகின்றனர்.

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலை 6 மணிக்கு தொடங்கும் கண்காணிப்பு பணி இரவு 11 மணி வரை நீடிக்கிறது
    • குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பரமசிவம், விஜயபாஸ்கர் ஆகியோர் மேற்பார்வையில் சவுக்கு கட்டைகள், பலகைகளால் தடுப்புகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    தாராபுரம்:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இந்நிலையில் பொதுமக்கள் பெரும்பாலும் தீபாவளிக்கு புத்தாடைகள், தங்க நகைகள், பட்டாசுகள், இனிப்புகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்க தாராபுரம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து தினசரி ஏராளமான பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர். மேலும் பெரிய கடைவீதி, ஜவுளி கடை வீதி, பொள்ளாச்சி ரோடு, சின்னக்கடை வீதி ஆகிய பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகள், நகை கடைகள் மற்றும் மளிகை கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கூட்டத்தை தவிர்க்கவும், சீரான போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் நகரின் மையப்பகுதியான பூக்கடைக்கார்னரில் தாராபுரம் கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு கலையரசன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன் (சட்டம்-ஒழுங்கு), சஜினி (போக்குவரத்து), குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பரமசிவம், விஜயபாஸ்கர் ஆகியோர் மேற்பார்வையில் சவுக்கு கட்டைகள், பலகைகளால் தடுப்புகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இப்பகுதியில் எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறாத வண்ணம் 24 மணி நேரமும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் போக்குவரத்தையும், பொதுமக்கள் நடமாட்டத்தையும தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலை 6 மணிக்கு தொடங்கும் கண்காணிப்பு பணி இரவு 11 மணி வரை நீடிக்கிறது. போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில் "பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடக்காமல் இருக்க பொதுமக்கள் தங்களது பணம் மற்றும் நகைகள்,செல்போன்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்" என்று கூறினர். 

    • தீபாவளி பண்டிகை கொண்டாட இன்னும் சில தினங்களே உள்ளது.
    • கூட்டநெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    தஞ்சாவூர்,

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூர்- தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

    சென்னை எழும்பூரில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் 12-ம் தேதி ஆகிய 2 நாட்கள் இரவு 11.45 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண்.06001) தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ஊர்களின் வழியாக தூத்துக்குடிக்கு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு சென்றடையும்.மறுமார்க்கமாக 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு (வண்டி எண்.06002) மறுநாள் அதிகாலை 4.45 மணிக்கு சென்னை எழும்பூருக்கு செல்லும்.

    மேற்கண்ட தகவலை ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • அறிவழகன் அகல்யா அறக்கட்டளையை நடத்தி வருகிறார்
    • தீபாவளி முன்னிட்டு பெண்களுக்கு இலவசமாக சேலை வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் 25-வது வார்டு கவுன்சில் கோடியக்காடு, கோடியக்கரை பகுதியை உள்ளடக்கியது.

    இந்த வார்டில் அ.தி.மு.க.வை சேர்ந்த அறிவழகன் என்பவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இவர் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்தில் துணை பெருந்தலைவராக தேர்வு செய்யப்பட்டு மக்கள் பணியாற்றி வருகிறார்.

    இவர் தான் ஏற்படுத்தி உள்ள அகல்யா அறக்கட்ட ளையின் சார்பில் அப்பகுதி மக்களுக்கு தீபாவளி முன்னிட்டு குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு இலவசமாக சேலை வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினார்.

    நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஓ.எஸ். மணியன் கலந்து கொண்டு கோடியக்காடு கிராமத்தில் உள்ள 1000-த்திற்கும் மேற்பட்ட குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு சேலைகளை வழங்கினார்.

    கோடியக்கரை கிராமத்திற்கு விரைவில் அங்கு உள்ள குடும்ப பெண்களுக்கு இலவச சேவைகள் வழங்கப்படும்.

    முன்னதாக வேதாரண்யம் ஒன்றிய குழு துணை பெருந்தலைவரும், 25 வது வார்டு வேதாரண்யம் ஒன்றிய கவுன்சிலருமான அறிவழகன் சட்டமன்ற உறுப்பினரை சால்வை அணிவித்து வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் கிரிதரன், நாகை அ.தி.மு.க. பிரமுகர் சிவபெருமான், கோடியக்காடு அதிமுகவை சேர்ந்த தமிழ்வாணன், பக்கிரிசாமி மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

    • முதல்முறையாக தமிழக அரசு நிறுவனமான டேம் கால் இந்த ஆண்டு தீபாவளி லேகியத்தை தயாரித்துள்ளது.
    • நமது பாரம்பரிய மருத்துவ முறைகளால் எந்த பக்க விளைவுகளும் கொடுக்காத முறையில் தீபாவளி லேகியத்தை நிறுவனம் தயாரித்துள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையின்போது இனிப்பு மற்றும் கார வகைகளை பொதுமக்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இதில் பயன்படுத்தப்படும் எண்ணெய் மற்றும் மூலப்பொருட்கள் இது தவிர அதிகமாக சாப்பிடுவது போன்ற பிரச்சினைகளால் வயிற்று கோளாறுகள் உருவாகும்.

    கடைகளில் தீபாவளி லேகியம் விற்கப்படும் முதல்முறையாக தமிழக அரசு நிறுவனமான டேம் கால் இந்த ஆண்டு தீபாவளி லேகியத்தை தயாரித்துள்ளது.

    இந்த லேகியத்தை ஆயுர்வேத தினத்தை ஒட்டி இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகப்படுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    நமது பாரம்பரிய மருத்துவ முறைகளால் இந்த பக்க விளைவுகளும் கொடுக்காத முறையில் தீபாவளி லேகியத்தை நிறுவனம் தயாரித்துள்ளது.

    பொதுமக்கள் இதை வாங்கி பயன்படுத்தலாம் தமிழகம் முழுவதும் டைம் கால் விற்பனை கடைகளில் இன்று முதல் கிடைக்கும் என்றார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் கஹந்தி சிங் பேடி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிவகாசியில் தொடக்கத்தில் வந்த வாடிக்கையாளர்களுக்கு அனைத்து வகை பட்டாசுகளும் கிடைக்கும்.
    • இறுதி வியாபார நாட்களில் வருபவர்களுக்கு கேட்கும் பட்டாசுகள் கிடைப்பது அரிதாக உள்ளது.

    சிவகாசி:

    பட்டாசு உற்பத்திக்கு பெயர் போன விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெரிய மற்றும் சிறிய அளவில் 1500-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்புகளை பெற்று வருகின்றனர்.

    நாடு முழுவதும் 90 சதவீத பட்டாசு தேவைகளை சிவகாசி நகரம் பூர்த்தி செய்து வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பே பட்டாசு உற்பத்தி பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இரவு பகலாக ஊழியர்கள் பட்டாசுகளை உற்பத்தி செய்தனர்.

    பண்டிகை நாட்கள் நெருங்க நெருங்க வெளியூர் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் சிவகாசிக்கு நேரடியாக வந்து பட்டாசுகளை ஆர்டர் செய்து வாங்கி சென்றனர். குறிப்பாக வட மாநிலத்தில் இருந்து அதிக அளவில் ஆர்டர்கள் குவிந்தன.

    சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு பசுமை பட்டாசுகளை தயாரிக்க வேண்டும். பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி பட்டாசு வகைகள் உற்பத்தி செய்ய வேண்டும். சரவெடிக்கு தடை, பண்டிகை நாளில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் போன்ற பல்வேறு விதிமுறைகளை கோர்ட்டும், அரசும் விதித்துள்ளது.

    இவ்வளவு இடர்பாடுகளையும் மீறி இந்த முறை சிவகாசியில் கடந்த சில வாரங்களாகவே பட்டாசு வியாபாரம் தீவிரமாக நடைபெற்றன. வெளி மார்க்கெட்டுகளில் விற்பதை விட சிவகாசியில் விலை குறைவாக இருக்கும். எனவே தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சிவகாசிக்கு வந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆலைகள் மற்றும் கடைகளுக்கு நேரடியாக சென்று பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனர். தீபாவளிக்கு முதல் நாள் வரை சிவகாசிக்கு வந்து பட்டாசு வாங்க வாடிக்கையாளர்கள் வருவது வழக்கம்.

    சிவகாசியில் தொடக்கத்தில் வந்த வாடிக்கையாளர்களுக்கு அனைத்து வகை பட்டாசுகளும் கிடைக்கும். நாட்கள் செல்ல செல்ல பட்டாசுகள் விற்பனையாகி வருகின்றன. இதனால் இறுதி வியாபார நாட்களில் வருபவர்களுக்கு கேட்கும் பட்டாசுகள் கிடைப்பது அரிதாக உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் கிடைக்கும் பட்டாசுகளை வாங்கிக் கொண்டு திரும்புகின்றனர்.

    சிவகாசியில் பட்டாசு விலை விபரம்:-

    புஷ்வாணம் 1 பாக்ஸ்-ரூ.90, தரைசக்கரம்-ரூ.80, சீனிவெடி பாக்கெட்-ரூ.30, சாட்டை-ரூ.15, கம்பி மத்தாப்பு-ரூ.40, ராக்கெட் சிறியது-ரூ.40, 30 ஷாட் பெட்டி-ரூ.350.

    மேற்கண்ட பட்டாசுகள் வெளி மார்க்கெட்டுகளில் பல மடங்கு விலை வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சிவகாசியில் பட்டாசு வாங்க குவிகின்றனர்.

    நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் இந்த முறை சிவகாசியில் பட்டாசு வியாபாரம் நன்றாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை 95 சதவீத பட்டாசுகள் விற்பனை ஆகியுள்ளது.

    இன்னும் பண்டிகைக்கு 2 நாட்கள் இருப்பதால் முழுமையாக பட்டாசுகள் விற்பனையாகிவிடும் என வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    ×